Monday, August 9, 2010

ஐ.பெரியசாமி


"தலைவர் அவர்களே... இந்த சாமானியனின் இல்லத் திருமணத்தை நீங்களே நேரில்

வந்து நடத்திவைத்துஇருப்பதை நினைத்தால், எனக்குப்பெருமை யாக இருக்கிறது. இதற்கு நான் காலம்எல்லாம் கடன்பட்டு இருக்கிறேன்" என்று சொல்லும்போதே அழுகை முட்டிக்கொண்டு பீறிட்டது ஐ.பெரியசாமிக்கு!

அடுத்துப் பேசிய முதல்வர் கருணாநிதி இப்படிச் சொன்னார், "தி.மு.கழகத்தில் கே.வி.கே. சாமி காலம் தொட்டு இந்தக் காலம் வரையில் பல சாமிகள் இருந்தாலும் கூட, இவர் அவர்களுக்கு எல்லாம் ஒரு படி மேலே பெரிய சாமி என்பதால், இவர் எனக்கு முக்கியமானவர். இந்த நட்பு உனக்கும் எனக்கும் ஏற்பட்டபந்தத் தால் ஏற்பட்டது. என்றென்றும் நான் உனக்கு அண்ணனாக இருப்பதிலே மகிழ்ச்சி அடைகிறேன்."

"தலைவர் ஏன் இப்படி சொன்னார்?" என்று கல்யாண வீட்டு சாப்பாட்டுக் கூடத்திலேயே பரபரப்பானது. "பெரிய குடும்பத்துக்கு வந்த மிகப் பெரிய பழி புகாரைச் சத்தம் இல்லாமல் முடித்துக் கொடுத்ததே நம் அண்ணன்தான். விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அத்தனைபேரை யும் தென் மாவட்டத்தில் இருந்து தெலுங்கு தேசம் கொண்டுபோய் வைத்திருந்து, காவல் காத்து, இறுதியில் விடுதலைச் செய்தி வரை சொல்லவைக்க நம்ம அண்ணன் பட்டபாடு கொஞ்சநஞ்சம் இல்லை. அதனால்தான் தலைவர் இப்படிச் சொன்னார்" என்று விஷயம் அறிந்த ஒருவர் பதில் அளித்தார். கோபாலபுரம் குடும்பத்துக்கு ஒன்று என்றால்எதைப் பற்றியும் கவலைப்படாமல் செய்து தரும் மனிதர் ஐ.பி. அதன்அதிகார மையமாக இருக்கிற அத்தனை பேரையும் மனம் நோகாமல் வைத்துக்கொள்ளும்மந்திரி களைப்பட்டியல் இட் டால், இவரது பெயரை முதலில் எழுதலாம்.

ஆரம்பம் முதலே அப்படித்தான் இருந்தார். 'எம்.ஜி.ஆரை ஊருக்குள் விட மாட்டேன்' என்ற அதிரடியான முழக்கம்தான் அவரை வத்தலக்குண்டு ஏரியாவைத் தாண்டிக் கவனிக்கவைத்தது. அப்போது நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் அவர் வெற்றி பெற, அதுவே காரணம் ஆனது. 96 தேர்தலின்போது ம.தி.மு.க. பக்கம் பொன்.முத்துராமலிங்கம் போனதால், யாருக்கு மந்திரி பதவி தருவது என்று கருணாநிதி தேடிக் கண்டுபிடித்து சிறு தொழில் துறை மந்திரி ஆக்கினார் இவரை.

அப்போதெல்லாம் அமைச்சர் கோ.சி.மணிஅறையில் மதிய நேரத்தில் ஒரு மினி கேபினெட் கூடும். நேரு, எம்.ஆர்.கே. பன்னீர், ஐ.பி. ஆகியோர் அதில் அவசியம் இருப்பார்கள். ஒன்றாக உட்கார்ந்துசாப்பிடுவார்கள். அந்த பந்தம் இன்றும் தொடர்கிறது. கோ.சி.மணிக்கு வயதாகிவிட்டதால் தலைமைப் பொறுப்பை நேரு எடுத்துக்கொண்டார். இவர்கள் ஒரு கோஷ்டி. (இதற்கு எதிரானது பொன்முடி, எ.வ.வேலு அணி). இதில் நேருவைப் பார்த்துப் பலரும் பயப்படுவார்கள். பன்னீர் என்ன சொல்ல வருகிறார் என்று புரியாமல் தவிப்பார்கள். ஆனால், ஐ.பி. அமைதியானவர். கோரிக்கைவைத்த ஆளைவிட அமைதியாகக் கேட்பார். பாந்தமாகப் பதில் அளிப்பார். கட்சி உறுப்பினர் கார்டு வைத்திருந்தால் நிச்சயம் செய்துகொடுப்பார். கட்சிக்காகப் பாடுபட்டு எந்தப் பிரதிபலனையும் அனுபவிக்காமல் இருக்கும் மூத்த உறுப்பினர்களுக்குப் பொற்கிழி வழங்க வேண்டும் என்று கருணாநிதி உத்தரவிட்டபோது, 10,000 பேருக்குத் தலா 10,000 கொண்ட பொற்கிழியை அள்ளிக் கொடுத்தவர் ஐ.பி. இந்த அறிவிப்பையே மறந்துபோன மாவட்டங்கள் சில உண்டு. அதேபோல், வருமானத்துக்கு வழி இல்லாத நிர்வாகிகளுக்கு, மாதச் சம்பளம் கொடுப்பது வரை திண்டுக்கல் மொத்தமும் அவருக்கு திமுதிமு ஆதரவு. ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே அவமானப்பட்டு நின்றது இவரது துறையினால்தான்.

தி.மு.க. கெட்ட கனவாக நினைத்து மறந்துவிட நினைக்கிற அறிவிப்புகளில் ஒன்று, 'நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கப்படும்' என்ற அறிவிப்பு. இது மறக்கக்கூடியதா என்ன? தமிழகத்தில் 50 லட்சம் ஏக்கர் நிலம் இருப் பதாகவும் அது பண்படுத்தப்படும் என்றும் அ.தி.மு.க. அறிக்கையில் எப்போதோ சொல்லப்பட்டதை இவர் கள் எடுத்துக்கொண்டு இப்படி அறிவித்தார்கள். ஆனால், அந்த அளவு தமிழகத்தில் தரிசு நிலங்கள் இல்லை என்பது தெரிந்து அதிர்ந்துபோனார்கள். இந்த உண்மையை உணர்ந்த அ.தி.மு.க., 'எத்தனை பேருக்கு இலவச நிலம் கொடுத்திருக்கிறீர்கள்?' என்று சட்டமன்றத்தில் கேட்க, 'எவ்வளவு இருக்கிறதோ அவ்வளவையும் கொடுத்துவிடுவேன்' என்று முதல்வர் கருணாநிதி சொன்னார். 'கையளவு நிலம் இருந்தால்கூட அதைப் பங்கிட்டுத் தருவேன்' என்றார். 'நீங்கள் நிலத்தைக் கொடுங்கள், நான் செம்மைப்படுத்திக் கொடுக் கிறேன்' என்று இன்னமும் இறங்கினார். சட்டமன்றத்தில் இதற்குப் பதில் அளிக்க முடியாமல் ஐ.பி-க்கு பி.பி. எகிறி ஷுகர்கூடியதுதான் மிச்சம். இது அவரது உடல் நிலையை அதிகமாகப் பாதித்தது.

அடுத்து, மதுரையில் இருந்து கிளம்பி வந்த குங்குமப் பிரமுகர் இன்னும் ஆரோக்கியத்தைக் கெடுத்தார். 'அண்ணன்தான் உங்களுக்குப் பக்கத்திலேயே இருக்கச் சொன்னார்' என்று சொல்லிய அந்தப் பிரமுகர், கோட்டையில் அமைச்சரின் அறையை ஆக்கிரமித்தார். அமைச்சர் ஆடினால், அசைந்தால், அது உடனடியாக மதுரைக்குச் சொல்லப்படும். அத்தனை அசைவுகளும் ஸ்கேன் செய்யப்பட்டன. இவர் இங்கு அனுப்பப்பட்டது மண்ணைப் பொன்னாக்குவதற்குத்தான். தமிழ்நாட்டு இயற்கை வளத்தை அரசாங்கத்தின் சார்பிலேயே கணக்கில்லாமல் அள்ளி, ஆற்றுப் பகுதிகளைப் பாலை யாக மாற்றும் காரியம் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கியது. அப்போது, அதைக் கடுமையாக எதிர்த்தது தி.மு.க. ஆனால், இவர்கள் ஆட்சிக்கு வந்ததும் முந்தைய ஆட்சியில் புரோக்கராக இருந்தவர்களே இதிலும் தொடர்ந்தார்கள். சிவகங்கை 'காசு'ம் புதுக்கோட்டை 'புராணப்' பாத்திரமும் தென்னாட்டின் அத்தனை மண்ணையும் அடிமட்டம் வரை சுரண்டியவர்கள். அவர்களோடு இந்தப் பிரமுகருக்கு அதிக நெருக்கமாம். மந்திரியின் அனெக்ஸ் அறையை இவர் ஆக்கிரமித்துக்கொண்டார். துறை சார்ந்த சின்ன விஷயங்களைக்கூடச் செய்யவிடாமல் இந்தப் பிரமுகர் தடுப்பதாக மந்திரிக்கே கோபம் ஏற்பட்ட நிலையில்தான், ஒருநாள் அதிகாலை முதல்வரிடம் இருந்து அழைப்பு.

"யாருய்யா அந்தப் பொட்டு?" என்ற கேள்வி முதல்வரிடம் இருந்து வந்ததும், "அண்ணனுக்கு வேண்டிய தம்பிதாங்க" என் றார் இவர். "அவனுக்கு மந்திரி அறையில என்னய்யா வேலை? எல்லோரும் சேர்ந்து என் ஆட்சிக்குக் கெட்ட பேரை உண்டாக் குறீங்களா? போ... அவனை விரட்டு" என்று காய்ச்சிஎடுத்து விட்டார் முதல்வர். ஐ.பி-யைப் பொறுத்தவரை யார் அவரிடம் எதைச் சொன்னாலும் சம்பந்தப்பட்டவருக்குச் சொல்லிவிடும் நல்ல பழக்கம்கொண்டவர். அந்தப் பிரமுகரை அழைத்து, "நீ என்னோட ரூமுக்கு வராதே! தலைவர் உன் மேல ரொம்பக் கோபமா இருக்கார்" என்று சொல்லி அனுப்பினார். குங்குமம் கலங்கவே இல்லை. இன்னொரு மந்திரியின் அறையில் தனது ஜாகையை மாற்றிக்கொண்டார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஐ.பி. அறையில் அவரே மீண்டும் உட்கார ஆரம்பித்தார். இன்றைக்கும் அதில் மாற்றம் இல்லை.

வீட்டு வசதித் துறைக்கு அறிவிக்கப்படாத மந்திரியாகவே அந்தப் பிரமுகர் வலம் வருகிறார். முதல்வர் அலுவலகத்தில் இருக்கும் 'அரசாட்சி' செய்யும் அதிகாரியும் குங்குமமும் இணைந்து செய்யும் காரியங்கள் முழுமையாக முதல்வர் கவனத்துக்குச் செல்வது இல்லை என்பதுதான் ஐ.பி. நலம் விரும்பிகளின் வருத்தம். "ஐ.பி-யை வருவாய்த் துறை மந்திரின்னு மட்டும் அழைத்தால் போதும். மற்றும் வீட்டு வசதி வாரியத் துறை என்று கூப்பிடாதீர்கள்" என்று இந்த விரும்பிகள் கெஞ்சுகிறார்கள். அந்த அளவுக்கு டம்மியாக இருந்தாக வேண்டிய நெருக்கடி.

வீட்டு வசதித் துறை தன்னைவிட்டுப் போனால்கூட நல்லது என்றே மந்திரி நினைப்பதாகச் சொல்கிறார்கள். இந்தத் துறைகூட அவருக்கு இடையில் வந்ததுதான். சுப.தங்கவேலன் இதைக் கவனித்து வந்தார். முதல்வரின் பரிந்துரையைக்கூட தங்கவேலன் மறந்துவிட்டதால் துறை அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது. தொடக்கத்தில் வருவாய் மற்றும் சட்டத் துறை அமைச்சராகத்தான் ஐ.பி. பொறுப்பேற்றார். அது ஐ.பி-யிடம் இருந்து பறிக்கப்பட்டது அற்ப காரணமாகத்தான். டெல்லியில் நடந்து வரும் ஒரு வழக்கு தொடர்பாக அதிகாலையில் அமைச்சருக்கு போன் செய்திருக்கிறார் முதல்வர். அன்றைய தினம் திண்டுக்கல்லுக்கு ரயிலில் போய்க்கொண்டு இருந்த ஐ.பி. தலையணைக்கு அடியில் போனை வைத்துவிட்டுத் தூங்கிவிட்டார். ஒரு மணி நேரம் அடித்துக்கொண்டே இருந்தது மணி. காத்துக்கொண்டே இருந்த கருணாநிதி, அமைச்சரை சென்னைக்கு வரவழைத்தார். "சட்டத் துறைக்கு மந்திரியா இருக்கிறவர் எனக்குப் பக்கத்தில் சென்னையில் இருந்தால் தேவலை. அதனால துரைமுருகனுக்குக் கொடுத்துடலாம்னு இருக்கேன்" என்று பாந்தமாகச் சொல்லி, பறித்துக்கொண்டார். சிறைத் துறை தொடர்ந்தது. இதுவும் அவரிடம் அதிக காலம் நீடிக்கவில்லை. தேனி கஞ்சா வியாபாரி ஒருவர் புழல் சிறையில் இருந்தார். கைதி ஒருவர் பரோலில் சென்று திரும்ப வேண்டுமானால், அதற்கு அமைச்சரின் கையெழுத்து அவசியம். தேனிக்காரர் மூன்று, நான்கு முறை தொடர்ந்து பரோலில் போனதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த உள்துறைச் செயலாளர் மாலதி, முதல்வரிடம் சொல்ல... இதற்குக் காரணமான பி.ஏ-வுக்குக் கல்தா கொடுத்துவிட்டதாக அமைச்சர் பதிலளிக்க, சமாதானம் அடையாத முதல்வர், அதையும் பறித்து துரைமுருகனிடம் கொடுத்தார். இப்படி எந்தத் துறையை எடுத்தாலும் ஐ.பி-க்குச் சிக்கல்தான். 'அண்ணனுக்கு வந்ததும் அதிகம்; அதனால நொந்ததும் அதிகம்' என்கிறார் ஆத்தூர் தம்பி ஒருவர்.

ஐ.பி-க்கு இரண்டு மகன்கள். மூத்தவர் செந்தில்குமார். இவரை ஐ.பி.எஸ். (ஐ.பெரியசாமி மகன் செந்தில்குமார் என்று அர்த்தம்) என்று அழைக் கிறார்கள். திண்டுக்கல்லைப் பொறுத்தவரை இவரே அனைத்துக்குமான அதிகார மையம். இவரது காதல் திருமணத்தை எந்தச் சிக்கலும் இல்லாமல் நடத்திக் கொடுத்தார் முதல்வர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியைக் குறிவைத்தார் ஐ.பி.எஸ். ஆனால், ஐ.பி. அதற்கு உடன்படவில்லை. அடுத்து நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நிற்க மகன் ஆயத்தமாகி வருகிறார். அப்பாவுக்கும் மகனுக்கும் ஒரே நேரத்தில் ஸீட் கிடைக்குமா என்று கேட்டால், 'வீரபாண்டியார் குடும்பத்துல இல்லையா?' என்று கேட்கிறார் ஒரு நண்பர். தி.மு.க-வில்தான் எல்லாவற்றுக்கும் முன்மாதிரி உண்டே!

அழகிரி - ஸ்டாலின் என்று இரட்டைக் குதிரை யில் சவாரி செய்யும் மந்திரிதான் இவரும். அழகிரி மட்டுமல்ல; அவரது மருமகனுக்குக்கூட நடுங்குவார். அதே சமயம், கண் தானம் செய்துவிட்டு, 'ஸ்டாலின் உடல் தானம் செய்ததால்தான், நான் கண் தானம் செய்ய ஊக்கம் பெற்றேன்' என்று பேசுவார். ஆச்சர்யம், சகோதரர்கள் இருவருமே இவரிடம் நெருக்கமாக இருப்பதாகக் காட்டிக்கொள்வது.

வருவாய் மற்றும் வீட்டு வசதித் துறையானது மக்களின் வாழ்க்கைப் பிரச்னைகளோடு தொடர்பு உடையது. பிறப்பு - இறப்பு, வருமான வரி,சொத்துச் சான்று வரை அனைவருக்கும் தர வேண்டியது இந்தத் துறை. பைசா இல்லாமல் இதில் எதையும் வாங்க முடியாது என்பது யதார்த்தம். பொங்கல், தீபாவளிக்குத் தரப்படும் இலவச வேட்டி - சேலை கள், ஒரு மாதத்துக்குக்கூட ஒழுங்காகப் பயன்படுத்த முடியாத அளவு 'தரம்' இருக்கும். 1.12 கோடி பேருக்கு இலவச டி.வி. தரப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் வாங்காதவர்கள் என்று பட்டியல் இட் டால் பல லட்சம் பேர் வருகிறார்கள். அனைத்துக்கும் மேலாக சுனாமி பாதித்த பகுதிகளுக்கு ஆறு ஆண்டுகள் ஆகியும் இன்னும் முழுமையான நிவா ரணங்கள் கிடைக்கவில்லை. 3,000 கோடி ரூபாய் பணத்தை இதுவரை செலவு செய்ததாகச் சொல் கிறார்கள். ஆனால், மீனவன் இன்னமும் வசதி அற்றவனாகத்தான் இருக்கிறான்.

மத்தியதரவர்க்கத்தின் மிகப் பெரிய கனவாக இன்று வீடுகள் மாறிவிட்டன. அந்தக் கனவை நிறை வேற்றி உதவுவதற்காகத்தான் வீட்டு வசதித் துறையே தொடங்கப்பட்டது. ஆனால், இன்று தனியார் பில்டர்கள் கையில் வீடு கட்டும் தொழில் மொத்தமாகப் போய்விட்டது. இவர்கள் நிர்ணயிக்கும் விலைகள், தனியார் வங்கிகள் வாங்கும் வட்டிகள் சேர்ந்து வீடு வாங்குவதையே முடக்கிவருகின்றன.

'வாங்கத்தக்க விலையில் அனை வருக்கும் வீடு' என்பதைக் குறிக் கோளாகக்கொண்டு இருக்கும் இந்தத் துறை பல்லாயிரக்கணக்கான வீடு களைக் கட்டத் தொடங்கினால் மட்டுமே, ஓரளவாவது நியாயமான விலையில் வீடுகளைப் பெற முடியும். அதற்கான ஆக்கபூர்வமான திட்டம் எதுவும் இதுவரை போடப்பட்டதாகத் தெரியவில்லை.

'நமக்குத்தான் கொடைக்கானல் ஏரியா இருக்கே' என்று நினைத்தால் நாம் என்ன

No comments:

Post a Comment